மதத்தைப் பரப்புவது சட்டப்படி தவறு!- மத விவகாரத்துறை அமைச்சர்!

- Shan Siva
- 03 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 3: டேசா ஸ்தாபாக்கில் கிறிஸ்தவம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் வீடியோவில் இரண்டு வெளிநாட்டவர் காணப்பட்டதை அடுத்து, மத விவகார அமைச்சர் நயிம் மொக்தார் மலேசிய சமூகத்தினரை அமைதியாக இருக்க அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டாட்சி அரசியலமைப்பு
மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே பொது அமைதியின்மையை
ஏற்படுத்தும் என்பதால் நிறுத்தப்பட வேண்டும் என்று நயிம் கூறினார்.
டேசா ஸ்தாபாக்கில் உள்ள
பல்பொருள் அங்காடிக்கு முன்னால் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் கிறிஸ்தவ மதத்தைப்
பரப்ப முயற்சிக்கும் காணொளி வைரலானதை அடுத்து, நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மத்திய அரசமைப்புச்
சட்டத்தை மதித்து கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அவர்
ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் 11(1) வது பிரிவு ஒவ்வொரு நபருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது என்று கூறுகிறது. அதேவேளையில் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 11 (4) பிற மதங்களைப் பரப்புவதைத் தடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *