நகரங்களின் அடையாளத்தைப் பாதுகாப்பீர்-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 26

மேம்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் மலேசியாவின் அடையாளத்தை குறிப்பாக அதன் கலை மற்றும் கலாச்சார ரீதியில் பாதுகாக்க வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதோடு, முறையாக அமைக்கப்பட்டுள்ள மற்றும் முறையான திட்டமிடலுக்காக, முக்கியமான அனைத்துலக நகரங்களிலிருந்து வேறுபடுத்தி. தனது தனித்துவமான தன்மைக்காக நாட்டின் நகரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

நகர்ப்புற திட்டமிடலில் பசுமை சுற்றுச் சூழலும் பொதுமக்களின் வசதிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று, அன்வார் கேட்டுக் கொண்டார்.“நாட்டின் நகரங்களை நாம் தனித்துவமாகவும் சிறப்புமிக்கதாகவும் மாற்ற வேண்டும். முழுமையான வளர்ச்சியில் நாம் பெருமிதம் கொள்வதற்கு ஏதுவாக, அவற்றில் தீவிர கவனத்தை செலுத்துமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

“செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் யுகத்தை நகர்ப்புற திட்டமிடுபவர்களும் நிர்வாகமும் இப்போது நம்பியிருப்பதால், இது, உங்களுக்கான ஒரு சவாலாகும்"அதோடு, வெற்றிகரமான. செல்வந்தர்கள் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு இடையே எந்த நகரமும் பிளவுபட்டிருக்காது என்பதையும் உறுதிப்படுத்துங்கள் என்று. நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.கோலாலம்பூரில்

நேற்று சனிக்கிழமை இரவில் நடந்த நகர்ப்புற திட்டமிடல் விருதளிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *