மலேசியாவில் அதிகரிக்கும் போதை அடிமைகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், : 2020 முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை மலேசியாவில் 703,857 போதைக்கு அடிமையானவர்கள் பதிவாகியுள்ளனர். இதில் ஜொகூரில் மட்டும் 78,363 பேர் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மாநில வாரியாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்த பக்காத்தான் ஹராப்பான் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் கேள்விக்கு சைஃபுதீன் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *