வீட்டில் போதைப்பொருள் – முதியவர் கைது!

- Shan Siva
- 16 Jan, 2025
மூவார், ஜன 16: சுங்கை அபோங்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரண்டு கிலோகிராம் சயாபு மற்றும் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, ஒரு முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கெனவே குற்றப்
பதிவுகளைக் கொண்ட சம்பந்தப்பட்ட 61 வயது முதியவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக
சோதனையில் தெரிய வந்துள்ளது என்று மூவார் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ரைஸ்
முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B மற்றும் 15(1)(a) இன் கீழ் விசாரணைக்காக ஜனவரி 20 ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *