கடனைத் திருப்பிக் கட்டாததால் வீட்டை எரிப்பதா? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி!

- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
கெப்போங்கில் உள்ள ஒரு வீட்டை ஆடவர் ஒருவர் தீ வைக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng, சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து விளக்கம் பெற்றார்.
சம்மந்தப்பட்ட விட்டின் உரிமையாளரின் மகன் அல்லோங்கிடமிருந்து கடன் பெற்றிருந்ததாகவும் ஜொகூரில் உள்ள தங்கும் விடுதியிலிருந்து கீழே விழுந்து அவர் உயிர் இழந்த நிலையில் தன் மகன் பெற்ற கடனுக்காகத் தங்கள் வீட்டை எரித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng தெரிவித்தார்.
வீட்டில் இருந்த CCTV காணொலியில் ஆடவர் ஒருவர் கையெறி குண்டுகளையும் தீயுடனானப் பாட்டில்களையும் வீட்டின் மீது எரியும்படியானக் காட்சிகள் பதிவாகியிருக்கும் நிலையில் காவல் துறை விரைந்து சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng வலியுறுத்தினார்.
Kejadian sebuah rumah dibakar di Kepong tular di media sosial. MP Kepong, Lim Lip Eng, mendapati kejadian berkaitan hutang pemilik rumah. Beliau mendesak polis segera menangkap pelaku, berdasarkan rakaman CCTV.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *