டிரம்பின் திட்டம் போருக்கு ஒப்பானது! சிறப்பு மக்களவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி MP அழைப்பு!

- Shan Siva
- 05 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காசா பகுதியை கையகப்படுத்தி மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்ததை அடுத்து, பாலஸ்தீனத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க சிறப்பு மக்களவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்பின் திடீர்
திட்டம் அனைத்து முஸ்லிம்கள் மற்றும் "மனிதநேயத்தை நேசிப்பவர்கள்" மீது
போரை அறிவிப்பதற்கு ஒப்பானது என்று பெரிக்காத்தான் கூட்டணியின் இந்திரா மஹ்கோத்தா நாடாளுமன்ற
உறுப்பினர் சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.
டிரம்பின்
திட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு பைத்தியக்காரத்தனமானது. உலகில் ஒருபோதும் இதுபோல்
நடந்ததில்லை என்று இன்று
மக்களவையில் மன்னரின் உரையை விவாதித்தபோது அவர் கூறினார்.
காசா பகுதியை
அமெரிக்கா கையகப்படுத்தி, அங்குள்ள
பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்திய பிறகு பொருளாதார ரீதியாக அதை மேம்படுத்தும்
என்று நேற்று டிரம்ப் கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக
அமெரிக்க அதிபர் டிரம்ப், காசாவிலிருந்து
பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளில் குடியேற்றம் செய்ய முன்மொழிந்தார். காசா பகுதி ஓர் இடிந்த தளம் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா காசா
பகுதியை சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், வெடிக்காத வெடிமருந்துகளையும் அகற்றுவதோடு, காஸாவை
மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் டிரம்ப் கூறினார். அது "உலக
மக்களுக்கு" ஒரு வீடாக மாறும் என்றும், பிராந்தியத்திற்கு நிலைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும்
அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *