இருப்பு ஓட்டுநர் இல்லாத 14 பேருந்துகள் மீது நடவடிக்கை!

top-news

பிப்ரவரி 3,

300 கிலோ மீட்டர் அல்லது 4 மணிநேரத்திற்கும் மேலானப் பயணத்தை மேற்கொள்ளும் பேருந்துகளில் இருப்பு ஓட்டுநரைக் கொண்டிருக்காத 14 பேருந்துகளுக்கு எதிராகப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நேற்றிரவு பினாங்கில் ஜூரு சுங்கச் சாவடியில் சோதனையின் போது 228 வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் சிறப்புச் சோதனையையும் பினாங்கு மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையம் மேற்கொண்டது. இருப்பு ஓட்டுநர் இல்லாமல் பயணித்த 14 விரைவுப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணைக்காகச் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 

JPJ Pulau Pinang mengambil tindakan terhadap 14 bas yang tidak mempunyai pemandu kedua dalam pemeriksaan di Plaza Tol Juru. Selain itu 228 saman dikeluarkan dalam operasi khas sempena Tahun Baharu Cina bagi kesalahan trafik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *