புனித வெள்ளி என்றால் என்ன

top-news
FREE WEBSITE AD

இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்

புனித வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, தன் உயிரைத் தியாகம் செய்ததை நினைவுகூரும் ஒரு துக்க மற்றும் தவம் அனுசரிக்கும் நாளாகும். ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இந்நாளில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவைப் பாதை வழிபாடுகள் மற்றும் உண்ணாநோன்பு கடைபிடிக்கப்படுகிறது.இயேசுவின் துன்பங்களை நினைவுகூறும் நாளாக, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது.இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் எனக் கருதப்படுகிறது. 

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இயேசுவை கயபா என்ற தலைமைக் குரு விசாரித்தார். அவர் மீது பல முரண்பாடான குற்றங்கள் வைக்கப்பட்டது. இயேசுவுடன் இருந்த அவரது சீடர்களும் அவர் கைது செய்யப்பட்டதும் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டனர். பின்னர் இயேசு, ரோமின் மன்னர் பிலோத்துவிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் இயேசுவை விசாரித்தது விட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறினார். ஆனால் மக்கள் அவர் கூறியதை ஏற்கும் மனநிலையில் இல்லை. சரி, இயேசுவின் பகுதியான கலிலேயாவின் மன்னர் ஏரோதுவிடம் அவரை அனுப்ப முடிவெடுத்தார். ஆனால், அவர் எருசேலம் சென்று விட்டதால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பிலோத்து. எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையயுமாறு கூறினார்கள். மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார். எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். இயேசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் கதறி அழுதனர். அந்நிலையிலும் இயேசு, ‘எனக்காக யாரும் அழ வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார். கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் கிறிஸ்துவர்கள்.அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிர் நீத்தார் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் சான்றோர் கூற்று.

இந்த உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்துவர்கள்.

லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *