தென்கொரியாவில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 18 நாள் வேலைநிறுத்த எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 24 Apr, 2026
தென்கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சம்பள மற்றும் போனஸ் தொடர்பான விவகாரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ப்யோங்க்டேக் (Pyeongtaek) தொழிற்சாலை வளாகத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் முக்கிய காரணம், நிறுவனத்தின் அதிக லாபத்துக்கு ஒப்பாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் சம்பள உயர்வு குறைவாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுவது ஆகும். குறிப்பாக, போட்டியாளர் நிறுவனமான SK ஹைனிக்ஸ் நிறுவன ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் சம்பள வேறுபாடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில், அடிப்படை சம்பளத்தில் உயர்வு, போனஸ் உச்சவரம்பை நீக்கம் மற்றும் நிறுவன லாபத்தில் ஒரு பகுதியை ஊழியர்களுடன் பகிர்வு செய்ய வேண்டும் என்பதும் அடங்கும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், மே 21 முதல் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் நடைபெறுமானால், சாம்சங் நிறுவனத்திற்கு தினமும் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



