நோன்பு பெருநாளை முன்னிட்டு சரவாக் மாநிலத்தில் கூடுதல் பொது விடுமுறை
- Surendran Sumdraraj
- 18 Mar, 2026
கூச்சிங், மார்ச் 18-
இந்த ஆண்டுக்கான நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சரவாக் மாநில அரசு கூடுதல் ஒரு நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சரவாக் மாநில அரசுச் செயலாளர் டத்தோ அமர் முகமட் அபு பக்கார் மார்சுகி வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் விடுமுறை 1 ஷவ்வால் விழும் தேதியைப் பொறுத்து அமையும் எனத் தெரிவித்தார். அதன்படி, 1 ஷவ்வால் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று வந்தால், மார்ச் 23 ஆம் தேதி திங்கட்கிழமை சரவாக் முழுவதும் கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்.
மாறாக, 1 ஷவ்வால் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று வந்தால், அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு மாநில மக்களுக்கு விழாக்காலத்தில் அதிக நேரத்தை குடும்பத்துடன் கழிக்க உதவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



