புத்ராஜெயா SCAM! மோசடியில் RM229,606 இழந்த 58 வயது ஆடவர்!

top-news

பிப்ரவரி 6,

புத்ராஜெயாவின் சுகாதார அமைச்சின் அதிகாரி போல நடித்த கும்பலிடம் RM229,606 பணத்தை இழந்ததாக 58 வயது அரசு ஓய்வு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த நவம்பர் மாதம் சுகாதாரப் பரிசோதனை செய்த தனக்கு சுகாதார அமைச்சிலிருந்து அழைப்பு கிடைத்த நிலையில் தாம் ஊக்க மருந்துகள் பயன்படுத்துவதாகப் பரிசோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் தம்மை கைது செய்யவிருப்பதாகவும் மோசடி கும்பல் மிரட்டிய நிலையில் தன்னிடம் இருந்த சேமிப்புப் பணமான RM229,606 பணத்தை இழந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.

இது போன்ற அழைப்புகள் பெற்றால் உடனடியாகச் சம்மந்தப்பட்ட அமைச்சு அல்லது துறையிடமிருந்து விளக்கம் பெற வேண்டும் என்றும் அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கும்படியும் Datuk Seri Yahaya Othman கேட்டுக் கொண்டார். மோசடிகளில் ஈடுபடும் கும்பலை மோசடிக்குப் பொதுமக்கள் பலியாகும் முன்னமே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவிருப்பதால் போலி அழைப்புகள் பெற்றால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படியும் Datuk Seri Yahaya Othman வலியுறுத்தினார்.

Seorang pesara kerajaan berusia 58 tahun kerugian RM229,606 selepas diperdaya sindiket menyamar sebagai pegawai Kementerian Kesihatan. Mangsa dituduh menggunakan dadah dan diperas ugut. Polis menasihatkan orang ramai untuk menyemak kesahihan panggilan sebelum membuat sebarang transaksi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *