முஸ்லிம் அல்லாத சமய விவகாரங்களைக் கவனிக்க தனி அமைச்சர் தேவை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 14-

முஸ்லிம் அல்லாதாரின் சமய விவகாரங்களைக் கவனிக்க தனி அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும் என்று ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். அதனை அமானா கட்சியின் கப்பளா பத்தாஸ் டிவிஷன் இளைஞர் பகுதித் தலைவர் அப்ரார் சாதிக் கண்டித்துள்ளார்.

ஜசெகவின் ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூயின் அந்தப் பரிந்துரை ஏற்புடைய ஒன்றல்ல. முஸ்லிம் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாக்க தேசிய ஒற்றுமை அமைச்சு போன்ற பல தளங்கள் உள்ளன என்று அப்ரார் குறிப்பிட்டார்.

இன்னொரு அமைச்சர் பதவியை உருவாக்குவது அரசாங்கத்திற்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும், இதுபோன்ற பரிந்துரைகளைத் தனது அரசியல் ஆதாயத்திற்காக பாஸ் பயன்படுத்திக் கொள்ளும் சாத்தியமும் உள்ளது. எனவே, அந்த வாய்ப்பை அக்கட்சிக்கு நாம் கொடுக்கக் கூடாது என்றார் அவர்.

மேம்பாடு, பொருளாதாரம், மக்களின் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நமது சமுதாயத்தின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய விவகாரங்களை நாம் எழுப்ப வேண்டியதில்லை என்று அப்ரார் சொன்னார்.பிரதமர்துறையில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதாரின் விவகாரங்களை கவனிக்க இரண்டு அமைச்சர்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் சமய விவகாரங்கள் தொடர்பான
சர்ச்சைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று சௌ பரிந்துரைத்திருந்தார்.

பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம் அல்லாதாரின் விவகாரங்களைக் கவனிக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அதனை புத்ராஜெயாவும் பின்பற்றலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *