வாகனத்தின் கண்ணாடியை இரும்பால் தாக்கிய ஆடவர் கைது!

top-news

டிசம்பர் 27,

சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை இரும்புச் சங்கிலியைக் கொண்டு தாக்கிய ஆடவரைக் காவல் துறை கைது செய்துள்ளதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Lee Swee Sake தெரிவித்தார். 

நண்பகல் 1.48 மணியளவில் பினாங்கில் உள்ள சாலையில் தாக்குதலுக்குள்ளான 36 வயது பெண் வாகனமோட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் அடிப்படையில் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Lee Swee Sake தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட 33 வயது மோட்டார் சைக்கிளோட்டியிடமிருந்து இரும்புச் சங்கிலியைப் பறிமுதல் செய்ததாகவும் முன்னமே அவர் மீது 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் 3 நாள்கள் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Lee Swee Sake தெரிவித்தார்.

Polis menahan lelaki berusia 33 tahun kerana menyerang cermin kenderaan wanita dengan rantai besi di Pulau Pinang. Suspek ditahan berdasarkan nombor motosikal dan kini direman tiga hari

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *