போதையில் பாராங்கத்தியால் தாக்கிய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
பாராங்கத்தியால் ஆடவர் ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்ததாக தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB BIN SELAMAT தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 11, ஜொகூரில் உள்ள MERLIN வணிகத் தலத்தில் நண்பகல் 2.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
43 வயது உள்ளூர் ஆடவர் கத்தி குத்துக்கு இலக்கானதாகவும் 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடையிலிருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் 43 வயது ஆடவரைத் தாக்கியதாகவும் காயமடைந்தவர் SULTANAH AMINAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்டவர் மீது 8 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் METAHPHETAMINE போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB BIN SELAMAT தெரிவித்தார்.
Seorang lelaki berusia 45 tahun ditahan selepas menyerang mangsa dengan parang di sebuah kedai di Johor. Mangsa berusia 43 cedera dan dirawat di Hospital Sultanah Aminah. Suspek mempunyai lapan rekod jenayah dan didapati positif methamphetamine.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *