உல்லாசப் பொழுதுபோக்கு மையத்தில் 27 இளம்பெண்கள் உட்பட 34 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
தலைநகரில் உள்ள கேளிக்கை மையத்தில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 27 இளம்பெண்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee தெரிவித்தார். அதிகாலை 12.40 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் 90 க்கும் மேற்பட்டவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தாய்லாந்து, லாவோஸ், மியான்மார், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 27 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட இளம்பெண்கள் என்றும் கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருக்க இளம்பெண்கள் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தின் மேலாளர்கள் பாதுகாவலர்கள் என 7 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee தெரிவித்தார்.
Pihak Imigresen Kuala Lumpur menahan 34 individu termasuk 27 wanita muda warga asing dalam serbuan di sebuah pusat hiburan. Kesemua wanita berusia 20 hingga 30 tahun dipercayai dieksploitasi sebagai tarikan pelanggan. Pengurus dan pengawal keselamatan turut ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *