கேளிக்கை மையத்தில் போதைப்பொருள்! நால்வர் கைது!

top-news

ஜனவரி 7,

நேற்று நள்ளிரவு ஜொகூரின் TAMAN MOUNT AUSTIN பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கேளிக்கை மையத்தில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 32 பேர் தடுத்து வைக்கப்பட்டதுடன் போதைப்பொருள் பயன்படுத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

கேளிக்கை மையத்தில் போதைப்பொருள் விற்கப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் 48 வயது கேளிக்கை மையத்தின் உரிமையாளரான உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கேளிக்கை மையம் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டதால் கேளிக்கை மையத்திலிருந்த பொருள்களையும் ரொக்கப் பணத்தையும் காவல் துறை பறிமுதல் செய்தது.

Polis menahan 32 orang, termasuk empat pengguna dadah, dalam serbuan di pusat hiburan tanpa lesen di Taman Mount Austin, Johor. Pemilik berusia 48 tahun turut ditahan, dan barang serta wang tunai dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *