இன்று இரவு 9 மணிக்கு பிரதமரின் புத்தாண்டு செய்தி!

- Shan Siva
- 31 Dec, 2024
கோலாலம்பூர், டிச 31: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது புத்தாண்டு செய்தியை அனைத்து உள்ளூர் ஊடக சேனல்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இன்று செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு தெரிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் தங்களது
முயற்சிகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்டின் இலக்குகள் மற்றும் திசைகளை வகுக்கும்
நோக்கிலும் இப்புத்தாண்டு செய்தி இருக்கும் என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட
முயற்சிகள் மற்றும் சேவைகள் மக்களுக்கும் நாட்டிற்கும் பயனாக அமையும் என்று தாம் நம்புவதாக
அவர் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *