நாங்களும் அம்மாதான்
.jpeg)
- M.ASAITHAMBY -
- 23 May, 2025
தனது கலைப் பயணத்தை நடனத்துடன் துவங்கியதோடு, 2010ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில் ஆட்டம் 100 வகை நடனப் போட்டியில் வென்றவர்தான் சிலாங்கூர் செமினியைச் சேர்ந்த பவித்ரா மனோகரன்.
ஒரு மாற்று பாலித்தனவராக இருந்து இந்தச் சமுதாயத்தில் போராடி வருவது அவ்வளவு எளிதல்ல. பல சவால்களை எதிர்நோக்கி வாய்ப்புகள் கிடைக்காமல், பலரால் ஒதுக்கப்பட்டு இன்று இந்நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய சவிரா என்ற நிறுவனமே காரணம். மற்றவர்களிடத்தில் வாய்ப்பைத் தேடாமல் தனக்கென ஒரு அடையாளத்தைத் தானே உருவாக்கிக் கொண்டதாக பவித்ரா மனோகரன் தமிழ் மலர் நேர்காணலின் பொழுது கூறினார்.
இவரின் பயணம் ஆட்டம் 100 வகை நடனப் போட்டியோடு நின்றுவிடாமல் Malaysia Performing Arts Society, ASTANA வழி தொடரப்பட்டது. அவ்வழியாக அவர் ஒரு நடனக்கல்வியாளராகவும், நடன இயக்குநராகவும், வடிவமைப்பாளராகவும், ஒப்பனை கலைஞராக உருவாகினார்.
அஸ்தானாவில் தனது கலையைத் தொடரும்பொழுது, அவர் நாட்டுவான், தசாவதாரம் போன்ற பல முக்கிய நாடகங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தும் உள்ளார். கலைத்துறையில் வளர்ச்சி பெற்ற அவர், நாளடையில் தனது சொந்த நடன மையத்தை ளுhயஎநநசயய ஊசநயவiடிளே என்ற பெயரில் நிறுவினார்.
Shaveeraa Creations வழி பல விளம்பரங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்காகப் பல கலைஞர்களுக்குப் பயிற்சிகளையும் அளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பவித்ரா புது தலைமுறை ஒப்பனை வடிவங்களை மரபு தோற்றத்துடன் இணைப்பதோடு புதிய பரிமாணத்தைத் தனது கலையில் கொண்டு வருகிறார். பவித்ரா ஹேர்சோன் அகாடமிக்கில் ஒப்பனைத்துறையில் படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்ததோடு மலேசியத் தொலைக்காட்சி வானொலி நிறுவனமான ஆர்டிஎம்மில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
அண்மையில் நீங்கள் பெற்ற விருதுகள் என்ன?
வரும் 31 மே எனக்குப் பட்டமளிப்பு விழா. இதை சார்ந்து இன்னும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால், என்னுடைய படிப்பையும் கலைத்துறையயும் பறைசாற்றும் வகையில் இந்தப் பட்டமளிப்பு அமையும் என்பதில் மகிழ்ச்சியே. அதுமட்டுமல்லாமல், 2012-2016 சிதாவர்ணா, 2017ஆம் ஆண்டின் ஆசியன் சீ விளையாட்டுப் போட்டி, 2022ஆம் ஆண்டின் கோலாலம்பூர் கெந்தா, 2014ஆம் ஆண்டின் மலேசியாவின் பாரம்பரிய இந்திய நடனங்களைச் சீனாவில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி, 2012 முதல் 2015 வரையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் நிகழ்ச்சிகள், 2018ஆம் ஆண்டு நியூ டெல்லியில் மலேசியக் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பு, 2023ஆம் ஆண்டு மலேசியாவின் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை கீழ் நடன இயக்குநராக பங்கேற்றது, ழநயசவ டிக ழயசiளா டுiஎந in ஊடிnஉநசவ 3.0 & 4.0 பங்கேற்பு, திருமணங்கள், தொழில்நுட்ப நிகழ்ச்சிகளில் நடன கலைஞராகப் பங்கேற்பு, 2019ஆம் ஆண்டில் டும் டும் கல்யாணம் வழி மலேசியச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது போன்ற பல விருதுகளும் சாதனைகளும் பெற்றுள்ளேன்.
Agenda Suria Communication வழங்கும் Incredible India பெரிய திட்டத்தில் முக்கிய பங்கு பவித்ராவிற்கு உண்டு. இத்திட்டமானது இந்தியாவின் அழகை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு உந்துகோலாகவும் அமைந்துள்ளது எனலாம். இதன் வழி, அவர் இந்தியாவின் பல கலாச்சாரங்களப் பிரதிபலிக்கும் மாடல்களையும், திருமணப் பெண்களின் தோற்றங்களையும் உருவாக்க முடிந்துள்ளது. மேலும், பல பெரிய நிகழ்ச்சிகளுக்கான நடன இயக்குநராகவும் இருந்துள்ளார்.
உங்களின் இந்த வெற்றிக்கு யார் காரணம்?
என்னைப் பொறுத்தமட்டில், பாட்டுதான் எனக்கு மிகப் பெரிய ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கின்றது எனலாம். என்னுடைய இந்தப் பயணத்தில் பாட்டின் துணையுடன்தான் பயணித்து வந்துள்ளேன். அதோடு, பண ரீதியில் பல நெருக்கடியைச் சந்தித்த பொழுது, அதிலிருந்து எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் நானே என்னை தயார்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்ல முடியும்.
எவ்வாறு எதிர்மறை கருத்துகளை எதிர்கொள்கிறீர்கள்?
நான் என்றுமே எதிர்மறை கருத்துகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். நேர்மறை கருத்துகளை மட்டுமே வரவேற்பேன். ஒரு விஷயம் பிரச்சினை என்று தெரிந்தால் அதனை எவ்வாறு எதிர்கொளவது என்பதை யோசிப்பேனே தவிர, அதனை கண்டு பயந்து ஒதுங்கும் ஆள் நானல்ல.
மற்றவர்கள் அறியாத உங்களைச் சார்ந்த தகவல் என்ன?
பொதுவாகவே அனைவரும் நான் திமிரு பிடித்த ஒரு நபர் என்று எண்ணுவர். உண்மையில் நான் அப்படி அல்ல. என்னுடன் பழகிப் பார்த்தால் நான் நன்றாக்வே பழகுவேன். பிடிக்காத விஷயத்தை முகத்துக்கு நேர் கூறுவேனே தவிர அனைவரிடத்திலும் நன்றாகப் பழகுவேன் என்று என்னை சார்ந்தவர்களுக்கு தெரியும்.
தங்களுக்கும் அன்னையர் தினத்திற்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி சில வார்த்தைகள்.
நானும் ஒரு தாய்தான். எனக்குக் கீழ் 10 மாணவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோர்களைக் காட்டிலும் நான் அவர்கள் மீது அதீத அன்பு கொண்டுள்ளேன். தாய்மை அடைவதற்கு பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் தாய் அல்ல, வார்த்தையால் அம்மா என்று கூப்பிட்டாலே தாய்மைதான்.
என்னுடன் இருக்கும் பிள்ளைகள் பலர் வேலையின் காரணமாக வீட்டை விட்டு வந்து தூரமாக இருக்கின்றனர். அவ்வகையில் எதும் ஒன்று என்றால் என்னைத்தான் தொடர்புக் கொள்வார்கள். நானும் நேரம் காலம் பார்க்காமல் அவர்களுக்காக இருப்பேன். என்னுடைய குடும்பத்தில் நான் முதல் பிள்ளை. ஆரம்பக் காலத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், தற்பொழுது எனக்கும் என் அம்மாவிற்குமான அன்பும் புரிதலும் அதிகரித்து வருகிறது என்றுதான் கூற முடியும்.
இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள். தங்களின் பிள்ளைகள் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தாலும், மாற்று பாலினத்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களின் ஆதரவு இருந்தால் உங்களின் பிள்ளைகள் நிச்சயம் நல்வழியில் செல்லும். பிள்ளைகளை என்றும் கைவிட்டு விடாதீர்கள்.
இன்றைய தலைமமுறையினரும் சமூக வலைத்தளத்தைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?
இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி உள்லனர். சமூக வலைத்தளத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. சமூக வலைத்தளம் எவ்வாறு என்னை தமிழ் நாளிதழ் வரை கொண்டு வந்துள்ளதோ அதை போல் நல்லதை முன்னிறுத்தினால் நல்லதே கிடைக்கும். விரல் நுனியில் இருப்பதைக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் நல்லதையும் கெட்டதையும் செய்து விடலாம். ஆகவே, ஒரு செயலை செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.
வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லி கொடுக்கவில்லை. நானேதான் என்னை வளர்த்துக் கொண்டேன். தற்பொழுது பட்டதாரியாகவுள்ளேன் என்பதற்கு என்னுடைய கணவர் பிரவின் கணேஷ்தான் காரணம். நான் எது செய்தாலும் அதற்கு உறுதுணையாக நின்று பண ரீதியிலும் எனக்கு உதவி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஷவிரா ஆர்ட்ஸ் நடனமணிகள் அனைவருக்கும் நன்றி. அவர்கள் இல்லை என்றால் இன்று இந்த நிறுவனம் இல்லை என்றார் பவித்ரா மனோகரன்.
மாற்று பாலினத்தவர் என்ற ஒரு காரணத்தினால் பல வாய்ப்புகளை இழந்த பவித்ரா, இன்று நியூ டெல்லி, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். Shaveeraa Arts Creations, Shaveeraa Makeup & Spa மற்றும் Shaveeraa Collections ஆகியவற்றின் நிறுவனராக இருப்பதோடு இன்று பலரின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கும் பவித்ரா மனோகரனை தமிழ் மலர் நாளிதழ் வாழ்த்துகிறது.இந்த உலகிற்கு திருமகளாய் வந்த திருங்கையே மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
Pavithra Manogaran, penari dan pengarah tari dari Selangor, berjaya atasi cabaran sebagai transgender. Beliau kini pemilik Shaveeraa Creations, aktif dalam seni persembahan antarabangsa dan menginspirasi ramai melalui seni dan kepimpinan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *