அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பின் தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப்!

- Muthu Kumar
- 22 Jun, 2025
(கே.ஆர்.மூர்த்தி)
சுங்கைபட்டாணி, ஜூன் 22-
மலேசியாவின் அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பின் ஆறாவது யோகா சாம்பியன்ஷிப் 2025 சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான மண்டபத்தில் காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மலேசியாவின் அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பின் தலைவர் யோகா டாக்டர் அமுதா கௌரவப்பன் தலைமையில் மலேசிய சுங்கைப்பட்டாணி யோகா விளையாட்டு கிளப்பின் ஆதரவோடு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகையாளர்களாக தவ்ஃபிக் சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் தவ் ஜோஹாரியின் பிரதிநிதியாக தமிழரசு, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கெடா மாநில தலைவர் டத்தோ ஓ.ஜி. சண்முகம் மற்றும் டாக்டர் கேசவன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தார்கள்.
மலேசியா சுங்கைபட்டாணி யோகா விளையாட்டு கிளப்பின் மாணவி ஊர்ஷித்தா கோபி இந்த நிகழ்வில் அவ்வப்போது சிறப்பு படைப்பினை படைத்தார்.இதில் சிறப்பு குழந்தை கிரியா ஹாத்த யோகாவைச் சேர்ந்த ஸ்ரீ ரக்ஷன் ஷோபித்தன் சிறப்பான யோகா பயிற்சினை வழங்கி வருகை புரிந்தவர்களை வியக்க வைத்தார்.
இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆறாவது யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், காஜாங், ரவாங் சிலாங்கூர் மற்றும் ஈப்போ பேராக் ஆகிய மாநிலங்களிலிருந்து 150 மாணவர்கள் பங்குபெற்றார்கள். மாணவர்களின் பெற்றோர்களுடன் 280 பேர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து யோகா மாஸ்டர்களுக்கும் பாராட்டுச் நற்சான்றிதழும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதேபோல் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து நீதிபதிகளுக்கும் நீதிபதிகளுக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் கோலாலம்பூரைச் சேர்ந்த மாஸ்டர் தினிஷியா தயானந்தன், சிப்பாங்கைச்
சேர்ந்த மாஸ்டர் புவனேஸ்வரி சண்முகம், சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த மாஸ்டர் முருகையா ஆகியோருக்கு வெகுமதியும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன. ஈஸி என்ட்ரி மற்றும் அட்வான்ஸ் என்ட்ரி என இரண்டு பிரிவுகள் உள்ளன. சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என்று 8 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் 1 முதல் 5 இடம் வரை தேர்வு பெற்றவர்களுக்கு தகுதி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் முதல் நிலையில்
அபிநயா மோகனதாஸ்,இரண்டாம் நிலையில் அகிலாண்டேஸ்வரி அண்ணாதுரை, மூன்றாம் நிலையில் ஜீவித்தன் குணசேகரன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.2025ஆம் ஆண்டு சிறந்த யோகா விருது மாஸ்டர் சங்கர் என்பவருக்கு வழங்கப்பட்டது.. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் பலகாரங்கள் வழங்கப்பட்டன.
Kejohanan Yoga Malaysia ke-6 berlangsung meriah di Sungai Petani dengan penyertaan 150 peserta dari pelbagai negeri. Dikelolakan oleh Ashtanga Yoga Malaysia, acara ini menyaksikan persembahan cemerlang serta penyampaian sijil dan anugerah kepada pemenang dan jurulatih.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *