RM71.5 மில்லியன் மதிப்பிலானச் சட்டவிரோத மின்கழிவுகள் பறிமுதல்! - Datuk M.Kumar

top-news

பிப்ரவரி 16,

ஜொகூரில் செயல்பட்டு வரும் தொழில்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,379 டன் மின்கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M.Kumar தெரிவித்தார். ஜொகூரில் உள்ள Plentong, Desa Cemerlang, Ulu Tiram ஆகிய பகுதிகளில் சோதனையை மேற்கொண்டதாகவும் சட்டவிரோதமாக இரும்பு, தகரம் போன்றவற்றுடன் மின்சாரப் பொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மறுசுழற்சி மையமாக இயங்கி வந்த தொழில்சாலையில் உரிமம் இல்லாமல் டன் கணக்குகளில் பதுக்கி வைத்தற்காக 2 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M.Kumar தெரிவித்தார். சம்மந்தப்பட தொழில்சாலைகளிலிருந்து உரிமம் இல்லாது பதுக்கி வைக்கப்பட்டிருந்த மின்கழிவுகளுடன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பு RM71.5 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Johor merampas 2,379 tan sisa elektrik bernilai RM71.5 juta dalam serbuan di beberapa kilang di Plentong, Desa Cemerlang dan Ulu Tiram. Serbuan mendedahkan aktiviti penyimpanan sisa elektrik secara haram bersama besi dan logam lain. Dua pekerja asing ditahan dan beberapa mesin turut disita. Kes masih dalam siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *