PN தலைவர் சம்சூரியா? அது கட்சிக்கும், நாட்டிற்கும் தீங்கு! - ஹாடி மருமகன் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன16: பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தலைவராக திரெங்கானு  மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார் பொறுப்பேற்றால் பாஸ் கட்சி 37 நாடாளுமன்ற இடங்களை இழக்கும் என்று
சுங்கை பூலோ பாஸ் தலைவரும்,  டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனுமான ஜஹாருதீன் தெரிவித்துள்ளார்.

தனது முடிவு, அவர் வெளியிட மறுத்த உள்கட்சி தரவுகளின் அடிப்படையில் அமைந்ததாகக் கூறினார்.

டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு பதிலாக சம்சூரியை நியமிக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் அழுத்தம் குறித்து அவர் கவலை தெரிவித்தார், அத்தகைய நடவடிக்கை மூன்று குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் கட்சிக்கும் நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார்.

தரவுகளையும் யதார்த்தத்தையும் என்னால் வெளியிட முடியாது என்பதால், டாக்டர் சாம் டான் ஸ்ரீ முகைதீன் யாசினை பிஎன் தலைவராக மாற்றினால், பாஸ் தன்னிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் 37 நாடாளுமன்ற இடங்களை இழக்குமென்று அவர் கூறினார்.

இந்த சூழ்நிலைகளை நான் வெளிப்படையாகக் குறிப்பிட முடியாது. இது பாஸ் மற்றும் மலேசியாவிற்கு நல்லதல்ல என்பதை உணராமல், பாஸை, குறிப்பாக டாக்டர் சாமை, பிஎன் தலைவராக உயர்த்துவதில் நண்பர்கள் உற்சாகமாக இருப்பது எனக்கு கவலையளிக்கிறத என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த முடிவு பாஸ் மத்திய குழு மற்றும் சியுரா கவுன்சிலால் முறையாக அங்கீகரிக்கப்பட்டால், அதை சிறந்த நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வேன் என்று ஜஹாருதீன் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *