SOSMA கைதியை விடுவிக்க லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி கைது!

top-news

டிசம்பர் 19, 

சொஸ்மா சட்டத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடவரை விடுவிக்க koperal அந்தஸ்த்தில் உள்ள காவல் அதிகாரி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவரின் மனைவியிடம் RM 80,000 வரையில் லஞ்சம் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரின் மனைவியைத் தொலைப்பேசி மூலமாக அழைத்து காவல் அதிகாரி லஞ்சம் கேட்டதாகவும் முன் பணமாக RM25,000 பெற்றதாகவும் தொலைபேசி உரையாடலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் மீண்டும் அப்பெண்ணிடம் RM 2,000 பணம் கேட்டு மிரட்டியதாகவும், RM 1,000 ரொக்கமாகவும் காவல் அதிகாரி பெற்றுள்ளார். இது தொடர்பானத் தொலைப்பேசி உரையாடலின் அடிப்படையில் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

Seorang koperal polis direman lima hari mulai 21 Disember untuk membantu siasatan kes rasuah melibatkan RM80,000. Suspek didakwa meminta wang daripada seorang wanita untuk membantu membebaskan suaminya yang ditahan di bawah Akta SOSMA

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *