ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து பின்னடைவு
- Surendran Sumdraraj
- 04 May, 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் முக்கிய அரசியல் திருப்பம் உருவாகியுள்ளது. சபாநாயகரும் திமுக வேட்பாளருமான மு.அப்பாவு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகம் வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் சதீஷ் கிறிஸ்டோபர் முன்னிலையில் உள்ளார். ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னிலை பெற்று, அப்பாவு அவரை தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டாலும், முக்கியமான நேரடி போட்டி தவெக மற்றும் திமுக இடையே நடைபெற்று வருகிறது.
2021 தேர்தலில் இந்த தொகுதியை திமுக சார்பில் அப்பாவு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இம்முறை புதிய அரசியல் சூழல் மற்றும் தவெக கட்சியின் எழுச்சி காரணமாக போட்டி கடுமையாக மாறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



