கிளந்தான் ஊழல் தடுப்பு ஆணையம்: கடந்த ஆண்டு மட்டும் 107 புகார்கள்; 13 பேர் கைது
- Tamil Malar (Reporter)
- 22 Jan, 2026
கோத்தா பாரு, ஜன. 22-
கடந்த ஆண்டில் கிளந்தான் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மொத்தம் 107 புகார்களைப் பெற்றுள்ளதாக, அந்த அமைப்பின் மாநில இயக்குநர் ரோஸ்லி ஹுசைன் தெரிவித்தார். இவற்றில் 68 புகார்கள் லஞ்சம் வழங்குதல், லஞ்சம் பெறுதல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற ஊழல் கூறுகளை உடையவையாக இருந்ததாக அவர் கூறினார்.
மீதமுள்ள 39 புகார்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளில், அவற்றில் ஊழல் கூறுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கினார். பெறப்பட்ட மொத்த புகார்களின் அடிப்படையில், 31 தொடக்க விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டதுடன், மேலும் 13 விரிவான விசாரணைக் கோப்புகள் பதிவு செய்யப்பட்டன என ரோஸ்லி ஹுசைன் கூறினார்.
இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் அரசு பணியாளர்கள் என்பதும், ஒன்பது பேர் பொதுமக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக SPRM தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



