SPM மாணவரைக் காணவில்லை!

- Shan Siva
- 04 Dec, 2024
கோலாலம்பூர், டிச 4:
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் கெப்போங்கில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.17 வயதான முஹமட் ஜாஃபன் என்ற அந்த மாணவர், கெப்போங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியை விட்டு வெளியேறும் போது, அவரது நண்பர்கள் நேற்று கடைசியாகப் பார்த்ததாக செந்தூல் துணை போலீஸ் தலைவர் ஜஸ்னி சோல்பா தெரிவித்தார்.
அவர் ஸ்போர்ட்ஸ் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போன மாணவர் தொடர்பாக நேற்று இரவு 9.11 மணியளவில் அவரது தந்தையினால் புகார் செய்யப்பட்டது.
இதனை அடுத்து அந்த மாணவனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.அவர் காணாமல் போவதற்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு இருந்ததை ஜஸ்னி உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *