போதைப்பொருள் உட்கொண்ட SPM மாணவர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் காயு ஈத்தாம், ஏப் 13:  குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் நேற்று தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான (AADK) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், போதைப்பொருள் சோதனையில் பாசிட்டிவ் என வந்த 37 பேரில், 17 வயதுடைய இரண்டு SPM தேர்வர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் நேற்று மாலை வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், மொத்தம் 47 பேருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதாக கெடா AADK இயக்குனர் ரசிஃப் வான் கூறினார்.
அவர்களில், 37 பேருக்கு போதைப்பொருள் சோதனை பாசிட்டிவ் என வந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாய்லாந்தின் டானோக்கில் நடைபெற்ற சொங்கிரான் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பிய முதல் SPM தேர்வர், தனது 21 வயது சகோதரியுடன் கைது செய்யப்பட்டார்.
சோதனை முடிவுகளில், அந்த சகோதரிக்கு மெத்தாம் பெத்தமின், MDMA மற்றும் கெத்தமைன் ஆகிய மூன்று வகையான போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம், இந்த ஆண்டு SPM தேர்வு எழுதும் அவரது தம்பிக்கு கெத்தமைன் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த உடன்பிறப்புகள் ஆர்வத்தின் காரணமாக அந்தப் பொருட்களை உட்கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *