திங்கள் தேர்வு எழுதத் தவறிய எஸ்.பி.எம் மாணவர்கள் வியாழக்கிழமை எழுதலாம்!

- Muthu Kumar
- 04 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 4-
திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.பி.எம் தேர்வுக்கான மலாய் வாய்மொழி சோதனைக்கு வெள்ளப் பாதிப்பினால் செல்லத் தவறிய மாணவர்கள் நாளை வியாழக்கிழமை வரை அத்தேர்வுக்கு அமர தளர்வு வழங்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும், அந்த முக்கியமான தேர்வுக்கு அமர்வதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
"எனவே, நேற்று தேர்வுக்கு செல்லத் தவறிய மாணவர்கள் இன்று அல்லது நாளை தேர்வுக்கு செல்லலாம். எனவே, இந்தத் தளர்வை அனைவரும் தேர்வுக்கு அமர்வதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் இதைத் செய்கிறோம்." என்றார் அவர்.
நேற்று, நாடாளுமன்றக் கட்டடத்தில் மடானி புத்தக பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபட்லினா சிடேக் அவ்வாறு தெரிவித்தார்.நேற்று முன்தினம் தொடங்கிய எஸ்.பி.எம் தேர்வுக்கான மலாய் வாய்மொழி சோதனை நாளை வியாழக்கிழமை வரை நடைபெறும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *