அமலாக்கத் தரப்பினருக்கு உடல் கேமரா பயன் குறித்து ஆய்வு

top-news
FREE WEBSITE AD

(நமது நிருபர்)

சிரம்பான், நவ.24- அமலாக்கத் தரப்பினருக்கு உடல் கேமரா பயன்பாட்டின் தேவை குறித்துத் தொடர் ஆய்வு நடவடிக்கையைச் சாலைப் போக்குவரத்துத் துறை இன்னும் மேற்கொண்டு வருகிறது.

இதை அமல்படுத்து வதற்கு முன்பு இதுகுறித்த ஒட்டுமொத்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை திட்டமிடல் மற்றும் நடவடிக்கைப் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷாஃபாவி தெரிவித்தார்.

இந்த கேமராவை அமலாக்கத் தரப்பினருக்குப் பயன்படுத்தும் அவசியம் உண்மையில் இருக்கிறது. எனினும், இது இன்னும் தொடக்கக்கட்ட ஆய்வு நடவடிக்கையில்தான் உள்ளது.

இதை உண்மையில் அமல்படுத்துவதற்கு முன்பு ஒரு சான்று சோதனையையும் அத்துறை மேற்கொண்டு விட்டதாக செனாவாங் டோல் சாவடியில் நெகிரி செம்பிலான் மாநில ஒப்ஸ் பெர்செப்பாடு சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ ஜஸ்மானி ஷாஃபாவி குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *