இனவெறி மற்றும் வெறுப்பு அரசியலை தடுக்க மனித உரிமை கல்வி அவசியம்: சுஹாகாம்
- Surendran Sumdraraj
- 13 May, 2026
கோலாலம்பூர், மே 13-
மலேசிய மனித உரிமைகள் ஆணையமான SUHAKAM, இனவெறி, வெளிநாட்டவர் எதிர்ப்பு மனப்பான்மை மற்றும் சமூக பாகுபாடுகளை ஒழிக்க மனித உரிமை கல்வியை மேலும் வலுப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தளங்களில் இன அடிப்படையிலான வெறுப்பு பேச்சுகள், தூண்டுதல் கருத்துக்கள் மற்றும் சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்கள் அதிகரித்து வருவதாக சுஹாகாம் கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க நீண்டகால முயற்சிகள் அவசியம். தவறான தகவல்கள், இன அடிப்படையிலான முன்வைத்த கருத்துக்கள் மற்றும் வெறுப்பு பரப்பும் கதைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அவை பின்னர் பாகுபாடு அல்லது வன்முறையாக மாறும் அபாயம் உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இனங்களுக்கும் கலாசாரங்களுக்கும் இடையிலான புரிதலை அதிகரிக்கும் உரையாடல் நிகழ்ச்சிகள், பொதுமக்கள் விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் கல்வி முயற்சிகள் மூலம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தலாம் என்றும் சுஹாகாம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



