தோமஸ் கப் அணிக்கு உற்சாகம் – ஸே பேய்-இஸ்ஸுடின் இணைவு உறுதி

top-news

கோலாலம்பூர், பிப். 20-

தோமஸ் கப் போட்டிக்கான மலேசிய தேசிய பேட்மின்டன் அணிக்கு பெரிய உற்சாகமான செய்தியாக, தொழில்முறை இரட்டையர் ஜோடி கோ ஸே பேய் – நூர் இஸ்ஸுடின் ரம்சானி அணியில் சேர ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த போட்டி ஏப்ரல் 24 முதல் மே 3 வரை டென்மார்க்கின் ஹோர்சன்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

இந்த தகவலை தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனாக்கி, இன்று மலேசிய பேட்மின்டன் அகாடமியில் நடைபெற்ற பயிற்சி அமர்விற்குப் பிறகு உறுதிப்படுத்தினார். அவர்களின் இணைவு அணியின் வலிமையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெக்ஸி கூறுகையில், இந்த தொழில்முறை ஜோடி தாமஸ் கப் போட்டிக்காக மட்டுமின்றி, 2026 ஆசிய விளையாட்டுகள் வரை தேசிய அணியுடன் தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். “ஆம், அவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிய விளையாட்டுகள் வரை அணியுடன் இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *