கடைகளை மோதிய வாகனம்! இருவர் படுகாயம்! வாகனங்கள் சேதம்!

top-news

ஜனவரி 1,

கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடைகளை மோதொ விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்ததாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong தெரிவித்தார். 73 வயது முதியவர் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ECOMART வணிகக் கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் வழிபோக்கர் இருவரையும் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் இரு வாகனங்கள் விபத்தில் சேதமடைந்ததாகவும் Cha Hoong Fong தெரிவித்தார். விபத்துக்குக் காரணமான 73 வயது முதியவர் எந்தவொரு காயங்களுக்கும் இலக்காகவில்லை என Cha Hoong Fong தெரிவித்தார்.

Sebuah kenderaan yang hilang kawalan, melanggar dua pejalan kaki dan beberapa kenderaan di hadapan kedai Ecomart,  Taman Sentosa, Klang. Dua mangsa cedera, manakala pemandu berusia 73 tahun tidak mengalami sebarang kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *