சாலைகளுக்கு நடுவே வணிகம் செய்பவர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Dec, 2024
டிசம்பர் 6,
சமிஞ்சை விளக்குகளில் காத்திருக்கும் வாகனங்களை மறித்து பழங்களையும் பொருள்களையும் விற்பது குற்றச் செயல்களில் ஒன்றானது என தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB BIN SELAMAT தெரிவித்தார். ஜொகூரின் KEMPAS சாலைகளில் இது போன்று வாகனங்களை மறித்து பொருள்களை விற்பனை செய்யும் ஒரு வெளிநாட்டு ஆடவரும் 3 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாகவும் உரிமம் இல்லாது சாலையின் நடுவே விற்பனை செய்தவர்கள் எனும் அடிப்படையில் 17 முதல் 28 வயதுக்குற்பட்ட நால்வரையும் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக RAUB BIN SELAMAT தெரிவித்தார்.
இது மாதிரி சாலைகளின் நடுவே விற்பனை செய்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
Polis menahan empat individu berusia 17 hingga 28 tahun, termasuk seorang warga asing, kerana berniaga tanpa izin di tengah jalan di Kempas, Johor. Aktiviti ini disifatkan berbahaya dan boleh menyebabkan kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *