சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் முன்னிட்டு மாநிலக் கொடிகள் பறக்கவிடப்படும்!

- Muthu Kumar
- 07 Dec, 2024
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங் டிச.7
மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ்ஷா 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோலலங்காட் மாவட்ட ரீதியில் இருக்கும் அரசு அலுவலகங்கள், வியாபாரத் தளங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய இடங்களில் சிலாங்கூர் மாநிலக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு பறக்கவிடப் படும் என்று நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் ஏற்கெனவே நகராண்மைக் கழகத்தின் சுற்றறிக்கைகள் அரசு இலாகாக்கள், வியாபாரத் தளங்கள், பள்ளி களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நேற்று காலையில் பந்திங் நகர்ப்புறங்களில் நகராண்மைக் கழகத்தின் பணியாளர் கள் சிலாங்கூர் கொடிகளை ஆங்காங்கே ஏற்றி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டார். வரும் 11.12.2024 புதன்கிழமை அன்று சிலாங்கூர் சுல்தானின் பிறந்தநாள் வைபவம் கொண்டாடப் படுவதாக முகமட் ஹஸ்ரி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *