மாநில அரசு,சொத்து வரியில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 30 விழுக்காடு தள்ளுபடி!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, நவ. 30-

மாநில அரசு, சொத்து வரியில் ஈடுபட்டுள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 30விழுக்காடு தள்ளுபடி வழங்கும், என ஜொகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி ஆணையத் தலைவர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷீகோர் ஜொகூர் ஊடகவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர், ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். 2025 ஆம் ஆண்டுக்கான புதிய வரி விகிதங்களில் இந்த 30விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் எனவும், கடந்த ஆண்டில் மீளாய்வில் ஈடுபட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியுடன் இது ஒத்துப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்த 10 உள்ளூராட்சி மன்றங்களில் பத்து பகாட் மாநகராட்சி மன்றம், மூவார் மாநகராட்சி மன்றம், சிகாமட் மாநகராட்சி மன்றம், பொந்தியான் மாநகராட்சி மன்றம், கோத்தா திங்கி மாவட்ட மன்றம், தங்காக் மாவட்ட மன்றம், யோங் பெங் மாவட்ட மன்றம், சிம்பாங் ரெங்காம் மாவட்ட மன்றம், மெர்சிங் மாவட்ட மன்றம் மற்றும் லாபிஸ் மாவட்ட மன்றம் அடங்கும்.

முகமட் ஜஃப்னி, ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் உரையாற்றியபோது குறைந்தது 8 சட்டமன்ற உறுப்பினர்களால் இந்த வரி மதிப்பீட்டு பிரச்சினை எழுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.“எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கடைசி மீளாய்வு செயல்முறை 2013 ஆம் ஆண்டில் நடைபெற்றது, இது ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது, என அவர் மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *