தைப்பூசக் காவடிகளின் மாண்பைக் காப்போம்! – துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
.jpg)
- Thina S
- 04 Feb, 2025
பிப்ரவரி 4,
தைப்பூசத் திருநாளில் பக்தர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலானக் காவடிகளை அதன் மாண்பையும் புனிதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என ஒருமைப்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் YB செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இன்று செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.
காவடி சுமப்பதிலும் பக்தர்களின் நேர்த்திகடனைச் செலுத்துவதற்குமான மாண்பை அறிந்து நாம் செயல்பட வேண்டும் என்றும், கேலி கிண்டலுக்கு நாம் வாய்ப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்ககும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். காவடி எடுப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு செயல் அல்ல என்பதை நம் சமூகம் உணர வேண்டும் என்பதற்க்காக ஒற்றுமை அமைச்சின் கீழ் காவடி ஆட்டம் குறித்தானப் பட்டறை நடத்தபடவிருப்பதாகவும் YB செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நம்பிக்கை அளித்தார்.
காவடி எடுப்பதன் புனித்ததுவம், அதன் முக்கியத்துவம், காவடி எடுப்பதற்கானச் சரியான முறைமைகள், நடன நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு பயிலரங்கை ஒருமைப்பாட்டு அமைச்சு நடத்தவிருப்பதாகவும் YB செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *