தமிழ்நாட்டை உலுக்கிய விளாத்திகுளம் சம்பவம் திரைப்படமாகிறது
- Surendran Sumdraraj
- 16 Apr, 2026
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை மையமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியது. இந்த வழக்கு மாநிலம் முழுவதும் கண்டனத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது. சம்பவத்தின் பின்னர் பல்வேறு தரப்பினரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணிகள், சமூக பிரச்சினைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கிய கருத்துகள் இதில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் இருந்து இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



