திருக்குறள் எளிய உரை நூல் வெளியீடு! பொதுமக்களுக்கு அழைப்பு

- Thina S
- 12 Dec, 2024
மலேசியாவில் திருக்குறளுக்கான எளிய நடையிலான உரை நூல்கள் வெளியீடு காண்பது அரிதாக இருந்து வரும் நிலையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை போர்ட் கிள்ளானில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் தமிழ் ஆர்வளர் நா.இராமன் அவர்களின் திருக்குறள் எளிய உரை நூல் வெளியீடு காண்கிறது.
முழுவதும் எளிமையான உரையில் இலகுவாகப் புரியும் வகையிலானப் பொருள்கள் மட்டுமின்றி மலேசிய ஓவியர்களால் உருவான ஓவியத் தொகுப்புடன் இந்நூல் வெளியீடு காணவிருக்கிறது. திருக்குறள் மன்றத்தின் அறங்காவலரானத் தமிழ்த்திரு.முத்துசாமி திருமேனி அவர்களின் தலைமையில் போர்ட் கிள்ளான் கஸ்டம் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *