இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல" - முதல்வர் சித்தராமையா!

- Muthu Kumar
- 05 Jun, 2025
ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.அதன் வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் பெங்களூரு அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். அத்துட 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்துள்ளது.
இது தொடர்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளதாவது: மகா கும்பமேளாவில் நிறைய பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அங்கு 50, 60 பேர் இறந்தனர். நான் ஏதேனும் கேட்டேனா? அப்போது நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன. அதற்காக, இதனை அந்த சம்பவங்களுடன் இணைத்து ஒப்பிட்டு, ஆதரிக்கும் வகையில் நான் பேச போவதில்லை. ஆனால், காங்கிரஸ் விமர்சித்தது என்றால், அது வேறு வகையான விசயம். நானோ அல்லது கர்நாடக அரசோ அதனை விமர்சித்தோமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.சி,பி. அணியின் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியம் அருகே பெரிய சோகம் நடந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது என்றும், காயமடைந்த நபர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *