கிள்ளானில் கார் மீது மரம் விழுந்து தந்தை பலி! மகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!
 (2).jpeg)
- Shan Siva
- 24 Feb, 2025
கிள்ளான், பிப் 24: இன்று, ஜாலான் பத்து 3, கம்போங் புக்கிட் கூடாவில் கார் மீது மரம் விழுந்ததில் 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
அவருடைய இளம் வயது மகள் காயமின்றி உயிர் தப்பினார்.
மாலை 6.30 மணியளவில் பெய்த மழையின் போது மரம் முறிந்து அவர்களது Mercedes-Benz மீது விழுந்தது.
ஓட்டுநர் இருக்கையில் சுயநினைவின்றி அஸ்ஸஹாரி அன்சார் என அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட நபர் கிடந்த நிலையில், அவரது 13 வயது மகள் நூர் சைஃபா, ஆம்புலன்ஸ் வருவதற்குள் வழிப்போக்கர்களால் காப்பாற்றப்பட்டார்.
கிள்ளான் செலாத்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் அவசர அழைப்பு கிடைத்த ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரவு 7.12 மணிக்கு அஸ்ஸாஹரி இறந்துவிட்டதாக ஒரு துணை மருத்துவர் அறிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *