சக மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கோரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
- Surendran Sumdraraj
- 23 May, 2026
திருச்சி, மே 23-
திருச்சி அரசு மருத்துவமனையில் பயின்று வந்த செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, செவிலியர் மாணவிகள் மற்றும் சக மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருச்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவிகள், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட மாணவிகள், கோஷங்கள் எழுப்பி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் விரைந்து சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், “உண்மை வெளிவர வேண்டும்; மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



