நஜிப் ஆதரவு பேரணியில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை! - புத்ரா ஜெயா காவல்துறை எச்சரிக்கை

- Shan Siva
- 06 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 6: புத்ராஜெயாவில்
உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று திங்கள்கிழமை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள
நஜிப் ஆதரவுப் பேரணியில் கலந்து கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று புத்ராஜெயா போலீசார் எச்சரித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு அமைதியாக ஒன்று கூடுதல் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல், இடங்களின்.
உரிமையாளரிடமிருந்து அனுமதி பெறப்படாததால், புத்ராஜெயாவில்
நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்கள்
அனுமதிக்கப்படவில்லை. சட்டத்திற்கு
விரோதமாக அப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதில்
கலந்து கொள்பவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று,
புத்ராஜெயா போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமட், நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் எச்சரிக்கை
விடுத்தார். சாலைத் தடுப்புகளும்
கூடுதல் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீட்டுக் காவல் குறித்து முந்தைய மாமன்னர் வெளியிட்டிருந்ததாகக்
கூறப்படும் அவரின் வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பில், உயர்
நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக நஜிப் செய்திருக்கும்
மேல்முறையீட்டை புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று
திங்கள்கிழமை காலையில் செவிமடுக்க விருக்கிறது.
இந்நிலையில் இப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *