வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்! - பள்ளிக்கு படகில் அழைத்துச் சென்ற மீட்புப்படை!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, டிச 31:  இன்று  அதிகாலை பெலூரானில் உள்ள கிராமம் வெள்ளத்தில் சிக்கியதால், ஆறு மாணவர்கள் படகில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த ஆறு பேரில் 4 பேர் எஸ்பிஎம் தேர்வில் கலந்து கொண்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 7.29 மணியளவில் லாடாங் ஆ சான் பெலூரானில் உள்ள கம்போங் மேமன்ஜாங்கில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து காலை 8.32 மணியளவில் மீட்புப் படையினர் கிராமத்திற்கு வந்து மாணவர்களை படகில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *