வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்! - பள்ளிக்கு படகில் அழைத்துச் சென்ற மீட்புப்படை!

- Shan Siva
- 31 Dec, 2024
கோத்தா கினபாலு, டிச 31: இன்று அதிகாலை
பெலூரானில் உள்ள கிராமம் வெள்ளத்தில் சிக்கியதால், ஆறு மாணவர்கள் படகில்
பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த ஆறு பேரில் 4 பேர் எஸ்பிஎம் தேர்வில் கலந்து கொண்டதாக சபா தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலை 7.29 மணியளவில் லாடாங் ஆ சான் பெலூரானில் உள்ள கம்போங்
மேமன்ஜாங்கில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக தீயணைப்பு
வீரர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து காலை
8.32 மணியளவில் மீட்புப் படையினர்
கிராமத்திற்கு வந்து மாணவர்களை படகில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *