பத்து பூத்தேவை சிங்கப்பூருக்கு தாரை வார்த்தது மகாதீர்தான்!

- Shan Siva
- 09 Dec, 2024
கோத்தா திங்கி, டிச. 9: பத்து பூத்தே தீவு மீது மலேசியா உரிமை கொண்டாட முடியும் என்பதை அரச விசாரணைக் குழுவின். (ஆர்சிஐ) அறிக்கை காட்டுகிறது என்று அம்னோவின் உதவித் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மலேசியாவின்
சார்பில் கூட்டரசு அரசாங்கம் அனைத்துலக நீதிமன்றத்திடம் கடந்த 2017ஆம். ஆண்டில் பல ஆவணங்களைச் சமர்ப்பித்தது.
அப்போது ஜொஹூர் மந்திரி பெசராகப் பதவி வகித்து வந்த எனக்கு இந்த விவகாரம்
நன்றாகத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரகசியக்
காப்புச் சட்டத்தின்கீழ் இருந்த பல ஆவணங்களை பிரிட்டிஷ் அரசாங்கம்.
பகிரங்கப்படுத்தியது. பத்து பூத்தே தீவு மீதான இறையாண்மை மலேசியாவுக்குத்தான்
சொந்தம். என்பதைத் தீர்மானிக்கச் சட்டப்போராட்டம் நடத்த முடியும் என்பது
அத்தகவல்கள் மூலம் தெரிய வந்தது என்று கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான
காலிட் கூறினார்.
கோத்தா
திங்கியில் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று
நிகழ்ச்சியொன்றைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் காலிட் இதனைத்
தெரிவித்தார்.
அப்போது ஜொகூர்
மாநில அரசாங்கத்திடம் போதுமான ஆதாரங்கள் இருந்தன. அதனைப் பிரதமர் டத்தோஸ்ரீ
நஜிப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்திடம் சமர்ப்பித்தோம் என்று.
காலிட் மேலும் கூறினார். பத்து பத்தே தீவு சிங்கப்பூருக்குச் சொந்தம்
என்று மன்றம் தீர்ப்பளித்தால் அதனை
எதிர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்
இருந்தது. அவ்வாறு மேல்முறையீடு செய்யாவிட்டால், அதன் மீது நாம் உரிமைகோர முடியாது.
இந்நிலையில்,
கூட்டரசு அரசாங்கம் மேல்முறையீடு செய்தது.
ஆனால், அதன் பிறகு
ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மகாதீரின் அரசாங்கம் அந்த விண்ணப்பத்தை திடீரென்று
மீட்டுக் கொண்டது. இதனால், பத்து பூத்தே.
தீவு மீதான இறையாண்மையை நாம் பறிகொடுத்து விட்டோம் என்று காலிட் விளக்கினார்.
அந்த விவகாரம் தொடர்பாக அரச விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் அந்த
விண்ணப்பத்தை துன் டாக்டர் மகாதீர்தான் தனிஆளாக முடிவுசெய்தார் என்பது அம்பலமாகியுள்ளது
என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *