அரச மன்னிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர் அன்வார்தான்!

- Shan Siva
- 20 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 20:
நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பான
பிற்சேர்க்கையில் அரசாங்கம் செயல்படாததற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்க
வேண்டும் என்று குவா முசாங் அம்னோ வலியுறுத்தியிருப்பதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அன்வாரை தாக்குவதற்கு முன்பு அம்னோ
பிரிவு அதிக விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று குவா மூசாங் பி.கே. தலைவர்
அஷாருன் உஜி கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, டிசம்பர் 9 ஆம் தேதி, கூட்டாட்சி பிரதேச
மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் போது நஜிப்பின் அரச மன்னிப்பு விண்ணப்பத்தை
சமர்ப்பித்தவர் அன்வார்தான் என்று அவர் கூறினார்.
அந்த நிகழ்ச்சி
நிரலை கூட்டத்திற்குக் கொண்டு வந்ததற்காக குவா முசாங் அம்னோ பிரதமருக்கு நன்றி
தெரிவிக்க வேண்டும் என்று அவர்
கூறினார். குறைந்தபட்சம் நஜிப்பின் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கணிசமாகக்
குறைக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு
பிப்ரவரி 2 ஆம் தேதி,
நஜிப்பின் 12 ஆண்டு சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாக பாதியாகக்
குறைக்கப்பட்டு, RM210 மில்லியன்
அபராதம் RM50 மில்லியனாகக்
குறைக்கப்பட்டதாக மன்னிப்பு வாரியம் அறிவித்தது.
ஆனால், வீட்டுக்காவல் கூடுதல் உத்தரவு
விவகாரத்தில், மன்னிப்பு வாரியத்தின் முடிவு இல்லாததால், இந்த இணைப்பின் மீது அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க முடியாது என்று அஷாருன் கூறினார்.
உள்துறை அமைச்சர்
விளக்கியது போல, ஜனவரி 29 அன்று வாரியத்தின் முடிவின் அடிப்படையில்
சிறைத்துறை குறைக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றியது. அதில் மாட்சிமை தங்கிய மாமன்னரின்
கையொப்பம் மற்றும் அரச முத்திரை இருந்தது என்று அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *