பெர்சாத்துவை வலுப்படுத்த முகைதீன் கவனம் செலுத்துவது நல்லது-ராமசாமி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2:

பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் அனைத்து மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகங்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பிற்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்து உரிமை கட்சியின் தலைவர் பி ராமசாமி விமர்சித்துள்ளார்.
கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதால் பெர்சாத்துவின் அரசியல் நிலைப்பாட்டை உயர்த்த முகைதீன் இந்த முன்மொழிவை அறிவித்துள்ளார் என்று ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பெர்சாத்துவின் நிலைத்தன்மை பாஸ்  கட்சியைச் சார்ந்திருப்பதால், இது குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தர வாய்ப்பில்லை" என்று ராமசாமி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து, தனது கூட்டாளியான PAS உடன் பிரதம மந்திரிக்கான பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கருத்து வேறுபாட்டை ராமசாமி சுட்டிக்காட்டினார்,மலாய் என்ஜிஓக்கள் ஒன்றிணைந்தாலும், அத்தகைய கூட்டணி தானாகவே பெர்சத்துவுக்கோ அல்லது பெரிக்காத்தானுக்கோ பயனளிக்காது என்று அவர் கூறினார்.

மலாய் அரசு சாரா நிறுவனங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமில்லாத இலக்கை பின்பற்றுவதற்குப் பதிலாக, பெர்சாத்துவை வலுப்படுத்த முகைதீன் கவனம் செலுத்துவது நல்லது என்று அவர் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *