சீனாவிடமிருந்து RM 1,070 கோடிக்கு மின்சார ரயில்கள் பொதுக் கணக்குக்குழு விசாரணை அவசியமில்லை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச. 19-

சீனாவிடமிருந்து 1,070 கோடி வெள்ளிக்கு மின்சார ரயில்களை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் பற்றி பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஒப்பந்தம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில்தான் உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார்.

எது பற்றி அவர்கள் விசாரணை நடத்த எண்ணியுள்ளனர் என்பது தெரியவில்லை. அந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகக்கூட இல்லை. அத்திட்டம் ஓர் இணக்கப்பூர்வக் கட்டத்தில்தான் உள்ளது. அதில் புலன்விசாரணை நடத்துவதற்கு என்ன உள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை என்று புத்ராஜெயாவில் ஸெனித் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லோக் கூறினார்.

அந்த உத்தேச வாடகை ஏற்பாட்டில் போக்குவரத்து அமைச்சு, பொருளாதார அமைச்சு, ரயில்வே அசெட்ஸ் கோர்ப்பரேஷன், கேடிஎம்பி ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைச் சீராய்வு செய்ய வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெவித்துள்ளார்.

அடுத்தாண்டு பொதுக் கணக்குக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ள ஐந்து திட்டங்களில் இந்த ரயில் உடன்பாடும் ஒன்றாகும் என்றும் மாஸ் எர்மியாத்தி கூறியிருந்தார்.கேஎடிஎம்பி நிறுவனத்திற்கு கூடுதலாக 62 பயணி ரயில்களை வாடகைக்கு எடுக்கும் 1,070 கோடி வெள்ளி மதிப்புள்ள உடன்பாடொன்றை சீனாவுடன் மலேசியா செய்து கொள்ளவுள்ளது என்று கடந்த ஆகஸ்டில் லோக் தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *