பொது கசையடி ஒரு காட்டுமிராண்டித்தனம்!

- Shan Siva
- 30 Dec, 2024
கோலாலம்பூர், டிச 30: பொது கசையடி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் திரெங்கானுவைப் பின்பற்ற வேண்டும் மற்றும் சில ஷரியாக் குற்றங்களுக்காக பொது கசையடியை அமல்படுத்த வேண்டும் என்ற பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவரின் கூற்று ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று .சாயா அனாக் சரவாக் நிறுவனர் பீட்டர் ஜான் ஜபனால் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில்
கசையடி என்பது 19 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ ஆட்சியின்
நினைவுச்சின்னம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறை என்று அவர் விவரித்தார்.
இது மலேசியாவை சர்வதேச
சமூகம் மற்றும் மனித உரிமைகள் தர்மத்திலிருந்து விலக்கி வைக்கிறது. நவீன மலேசிய
சமூகத்தில், குறிப்பாக பல மதங்கள் வாழும் நாட்டில் இதற்கு இடமில்லை
என்று அவர் கூறினார்.
சரவாக்கில் உள்ள
இஸ்லாமிய அதிகாரிகள் அரசுக்கு எது சிறந்தது என்பதை அறிந்திருப்பதாக அவர் நம்பிக்கை
தெரிவித்தார்.
உங்கள் சொந்த
மாநிலங்களில் உங்கள் ஷரியா தீர்ப்புகளை வைத்திருங்கள். தயவு செய்து சரவாக்கில்
எங்களை தொந்தரவு செய்யாதீர்கள், ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் சரவாக் மற்றும்
சரவாக்கியர்களுக்கு முடிவெடுக்கும் அளவுக்கு சராவாக் இஸ்லாமிய அதிகாரிகள்
அறிவாளிகள் என்று FMTக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *