அம்னோவின் கதி அப்படித்தான்! - மகாதீர்

- Shan Siva
- 07 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 7: நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் அம்னோ கலந்துகொள்ளாதது ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அம்னோ நஜிப்பிற்கு
ஆதரவாக தனது பேரணியை முன்னெடுத்துச் சென்றிருக்கலாம், ஏனெனில் அது மன்னரின் விருப்பத்திற்கு எதிராக நடந்திருக்காது என்று மகாதீர்
கூறினார்.
அம்னோ பாஸ் உடன்
பேரணியில் பங்கேற்பதற்கு டிஏபியின் எதிர்ப்பு முக்கிய காரணம். அங்கு லிம் குவான்
எங் பெரும் சக்தியாக இருக்கிறார் என்று மகாதீர் தெரிவித்தார்.
அம்னோவால் அரசாங்கம்
வீழ்ச்சியடையாது, ஆனால் அம்னோ அரசாங்கத்தில் இல்லாவிட்டால் அம்னோ
தலைவர்களின் தலைவிதி பாதிக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அம்னோவின் கதி அப்படித்தான். அதன் தலைவர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தில் பங்கேற்பதைப் பொறுத்தது. அதற்கு டிஏபியின் ஆதரவு தேவை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *