லிம்முக்கு RM 1.4 மில்லியன் அபராதத்தைச் செலுத்தினார் முகைதீன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 24: யாயாசன் அல்புகாரியின் வரிவிலக்கு  மீதான அவதூறு வழக்கு தொடர்பாக லிம் குவான் எங்கிற்கு வழங்க வேண்டிய  RM1.4 மில்லியன் தொகையை  யாசின் முழுமையாக தீர்த்துள்ளார்.

லிம்மின் வழக்கறிஞர் Guok Ngek Seong, தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர் கணக்கில் 1 மில்லியன் ரிங்கிட் நிலுவைத் தொகையை ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்னதாக நேற்று செலுத்தியதாகக் கூறினார்.

கடந்த டிசம்பரில் 400,000 ரிங்கிட் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

 டிசம்பர் 16 அன்று நீதிபதி ரோஸ் மவார் ரோசைனிடம் இருந்து முகைதீன் நிபந்தனையுடன் கூடிய தடையைப் பெற்றார். 
அந்தத் தடையின் விதிமுறைகளின்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ரிம400,000 செலுத்த வேண்டும், மீதமுள்ள தொகையான ரிம1 மில்லியன் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் முகைதீன் முன்னாள் நிதியமைச்சரை அவதூறாகப் பேசியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 8 அன்று உயர்நீதிமன்றம் லிம்முக்கு RM1.35 மில்லியன் நஷ்டஈடு மற்றும் RM50,000 செலவுக்கான தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பை வழங்கியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *