சபா - சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 30: சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களுக்கு (PPS) மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக உயர்ந்துள்ளது.

சரவாக்கில், மாநிலம் முழுவதும் உள்ள 36 வெள்ள நிவாரண மையங்களில் 862 குடும்பங்களைச் சேர்ந்த 2,981 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சபாவில், வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 291 குடும்பங்களைச் சேர்ந்த 1,019 நபர்களாக கஉயர்ந்துள்ளது;.

இதற்கிடையில், சபா பொதுப்பணித் துறை (JKR) ஒரு தனி அறிக்கையில், கோத்தா மருதுவின் ஜாலான் மராக் பராக்கில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *